சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி, ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரயில் (06007) இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் (06008) இயக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை தாம்பரம் – நெல்லை இடையே இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே! appeared first on Dinakaran.